1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர் சடலமாக மீட்பு..!

Q

கேஷோப்பூர் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் நேற்றிரவு குழந்தை விழுந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. பின்னர், அது குழந்தை அல்ல, இளைஞர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று, ஆழ்துளை கிணற்றில் விழுந்த நபரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றுக்குள் டார்ச் லைட்டுகள், கேமராக்கள் உதவியுடன் அந்த நபரை அடையாளம் கண்டு மீட்கும் முயற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதையடுத்து அந்த ஆழ்துளை கிணற்றில் அருகே பள்ளம் தோண்டி அதன் மூலம் மீட்க முடிவு செய்தனர்.

சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற மீட்பு நடவடிக்கைகள் தற்போது தோல்வியில் முடிந்துள்ளன. சடலமாக மீட்கப்பட்டவர் யார் என்பது தெரியவில்லை.

அந்த நபர், குடிநீர் வாரியத்தில் திருடிவிட்டு வெளியேறியபோது, திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like