1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING :துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக தயார் - மல்லை சத்யா..!

Q

வைகோவின் வலது கரம் மல்லை சத்யா.வைகோவின் முடிவுகளை ஒரு நாளும் எதிர்த்ததில்லை.. வைகோவின் விசுவாசிகளில் முதன்மையானவர் மல்லை சத்யா. வைகோ வாரிசு அரசியலை எதிர்த்துதான் திமுகவில் இருந்து வெளியேறினார்.
அப்போது அவரது நம்பிக்கைக்குரிய பலர் திமுகவை விட்டு வெளியே வர விரும்பவில்லை.. ஆனால் மல்லை சத்யா வைகோவின் வழியிலேயே பயணித்தார்.. பல கட்சிகளில் இருந்து மல்லை சத்யாவுக்கு அழைப்புகள் வந்தன. ஆனால் மல்லை சத்யா அதையெல்லாம் ஏற்காமல் வைகோவுக்கு விசுவாசமாக இருந்து வருகிறார்.
வாரிசு அரசியலை எதிர்த்த வைகோ, மதிமுகவில் தனது வாரிசான துரை வைகோவுக்கு பதவி கொடுத்தார். அப்போதும் கட்சிக்குள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மல்லை சத்யா, வைகோவின் முடிவுக்கு கட்டுப்பட்டார். இந்நிலையில் துரை வைகோவின் சில நிர்வாக முடிவுகள் மல்லை சத்யாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வெடித்த மோதல், தற்போது பூதாகரமாகியுள்ளது. மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறார் துரை வைகோ. மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்கக்கோரி திருச்சி மதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றினர். மல்லை சத்யாவுக்கு எதிராக தொடர்ந்து குரல்கள் வலுத்தன.
இந்நிலையில் மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஏப்.20) கட்சியின் நிர்வாகிகள் குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, பேசிய துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, "நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியை விட்டு நீக்கி விடுங்கள். மதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக தயார். கடைசி வரை வைகோவின் தொண்டனாக இருந்துவிட்டுப் போகிறேன்" என்றார்.

Trending News

Latest News

You May Like