#BREAKING : பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மது பானங்களின் விலை உயர்கிறது..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/2a34dd588091891953f9998b56bbe10f.webp?width=836&height=470&resizemode=4)
தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த டாஸ்மாக் கடைகளுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் மதுபானங்கள் விற்க்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சாதாரண மதுபான வகைகள் தான் அதிக அளவில் விற்பனை ஆகும். அவை சுமார் 40 சதவீத அளவுக்கு விற்பனையாகின்றன. குவாட்டர் பாட்டிலின் விலை ரூபாய் 130, ஆஃப் பாட்டில் விலை ரூபாய் 260, ஃபுல் பாட்டில் விலை ரூபாய் 520 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீடியம் ரேஞ்ச் மதுபானங்கள் ரூபாய் 160 முதல் ரூபாய் 640 வரை விற்கப்படுகின்றன.
இந்நிலையில் 180 மி.லி அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ₹10ம், 180 மி.லி அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்களின் விலை ₹20ம், 650 மி.லி அளவு கொண்ட பீர் வகைககளின் விலை ₹10ம் உயர்த்தப்பட்டுள்ளது.