1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : ஈஷா சத்குரு மருத்துவமனையில் அனுமதி..!

1

கோவையில் ஈஷா மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பிரமாண்டமான ஆதியோகி சிலையை காண இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.

அந்த வகையில் சமீபத்தில் வந்த மகாசிவராத்திரி விழா ஈஷா மையத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில்கோவை ஈஷா மையத்தின் நிறுவனரும், ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் தேதி டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மூளையில் 2 இடங்களில் ரத்தக்கசிவு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. உடனடியாக அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது வெண்டிலேட்டர் அகற்றப்பட்டு நன்றாக குணமடைந்து வருவதாக டெல்லி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “சத்குரு எங்களால் ஏற்படுத்தப்பட்ட மருத்துவ நடவடிக்கைகளை தாண்டி தன்னைத்தானே அவர் குணப்படுத்திக் கொள்கிறார். சூழ்நிலைகள் கடுமையாக இருந்தபோதிலும், மிகவும் சவாலான சூழ்நிலைகளைக் கூட எவ்வாறு அழகாகச் சமாளிக்க முடியும் என்பதை சத்குரு நிரூபித்துக் காட்டுகிறார்” என்று தெரிவித்துள்ளனர்.


 

Trending News

Latest News

You May Like