#BREAKING : ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு..!

இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அசாதரண சூழல் ஆகியவற்றின் காரணமாக மீதவுள்ள ஐபிஎல் தொடர் காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.ஏற்கெனவே போர் பதற்றம் காரணாம பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியானது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பயங்கரவாதிகளின் பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்த நிலையில், நேற்றிரவு பாகிஸ்தான் ராணுவம் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை நடத்தியது. இதனை இந்திய பாதுகாப்பு படை வெற்றிகரமான முறியடித்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் - டெல்லி இடையிலான ஐபிஎல் போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது.
இதனால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. இதனைத் தொடர்ந்து இன்று ஐபிஎல் நிர்வாகக் குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பு கருதி ஐபிஎல் தொடரை நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
எஞ்சிய போட்டிகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பார்க்கப்பட்டாலும், அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பதும் சந்தேகம் தான். ஏனென்றால் ஜூன் மாதத்தில் இருந்து வெளிநாட்டு வீரர்களுக்கு தேசிய அணிகளுக்கான போட்டிகள் தொடங்கிவிடும். இதனால் 18வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் கைவிடப்பட்டதா என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே நிலவி வருகிறது.