#BREAKING : இந்திய வீரர் வீர மரணம்..!

எல்லையில் பாகிஸ்தான் உடனான சண்டையில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீர மரணமடைந்துள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. முரளி நாயக் ஆந்திர பிரதேசத்தின் சத்ய சாய் மாவட்டத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் தாக்குதலை எதிர்கொண்டு முறியடிக்க எல்லையில் 60,000 வீரர்கள் குவிக்கப்படுகின்றனர். பாதுகாப்பபயிற்சியில் இருந்த வீரர்களும் அவசர பணிக்காக விரைகின்றனர்.
பாகிஸ்தான் தாக்குதலின்போது ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த முரளி நாயக் என்ற இந்திய வீரர் வீர மரணம் அடைதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று அல்லது நேற்று முந்தினம் நடந்திருக்கலாம் என்றும், அவரின் உடல் நாளை அவரது சொந்த கிராமத்திற்கு எடுத்து செல்லப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.