#BREAKING : இந்தியா அணி அபார வெற்றி..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/e1fed73b5a5a0d83fe23a0b69954b184.jpg?width=836&height=470&resizemode=4)
இந்தியா மற்றும் ஆப்கன் அணிகள் மோதும் 3 டி20 போட்டி கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியுள்ளது.முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 158 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 17.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா டக் அவுட் ஆனா நிலையில், சிவம் துபே அதிரடியாக விளையாடி 60 எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஷிவம் துபே 60, ஜிதேஷ் சர்மா 31 ரன்கள் எடுத்தனர். ஆப்கன் தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.