#BREAKING : பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தை துவம்சம் செய்த இந்தியா...!

பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை இந்தியா கையாண்டது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களும் பதுங்குக் குழிகளும் அழிக்கப்பட்டன. பதிலுக்கு பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தாக்குதலில் பிரபல ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் சின்னாபின்னமானது. மேலும் மைதானத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் உருதெரியாமல் உருக்குலைந்தது. ட்ரோன் தாக்குதலில் மைதானத்தில் தீப்பிடித்து எரிந்ததை பொதுமக்கள் பல மீட்டர் தூரத்தில் நின்று பார்த்தனர். மேலும் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே இருந்த ஒரு சில கட்டடங்களும் தரைமட்டமானததாக தகவல் வெளியானது.
இதனால் அந்தப் பகுதியை போலீஸார் சுற்றிவளைத்து பொதுமக்கள் செல்வதற்கு தடை விதித்தனர். மேலும், இந்தத் தாக்குதலில் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. தாக்குதல் தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியானது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியையொட்டி, பெஷாவர் மற்றும் கராச்சி அணிகளுக்கு இடையே இன்று இரவு 8 மணிக்கு போட்டி நடைபெறுவவதாக இருந்தது. இதைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், இந்தியா நடத்திய தாக்குதலில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் முற்றிலும் உருக்குலைந்ததால் போட்டி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
மேலும், பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி (பிஎஸ்எல்) ராவல்பிண்டியில் இருந்து கராச்சிக்கு இடமாற்றம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதேபோல கராச்சி மற்றும் லாகூரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியதால், அங்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
இதுதவிர பாகிஸ்தான் விமானப் படை நிலைகளைக் குறிவைத்தும் இந்தியா துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இதனால் விமானப் படை நிலைகள் உருக்குலைந்தன. இந்தியாவின் தாக்குதலை பாகிஸ்தான் சிறிது கூட எதிர்பார்க்கவில்லை.