#BREAKING : சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/a123d560c82a25e9b45476897302b801.webp?width=836&height=470&resizemode=4)
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை உதயநிதி ஸ்டாலின் பேசியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (நவ.29) காலை 11.00 மணிக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள், தனிநபர் வழக்கு உத்தரவுகளை தற்போது பிறப்பிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். அத்துடன், வெறுப்பு பேச்சு வன்முறையைத் தடுக்க அதிகாரி நியமனம் செய்யப்பட்டாரா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு தொடர்பாக நான்கு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.