1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வு தேதிகளில் மாற்றம்..!

1

தமிழக முழுவதும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடப்பதற்கான அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை கடந்த மாதம் வெளியிட்டது. 

11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு நாளை 7ம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புயல் காரணமாக பாதிப்புகள் பெருமளவில் உள்ளதால் தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிச.07, 08) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் 14 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.பொது வினாத்தாள் என்பதால் தனித் தனியாக வினாத்தாள் தயாரிக்கும் சிரமத்தை தவிர்க்க தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1

Trending News

Latest News

You May Like