1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : குட்கா, பான் மசாலாவிற்கு தமிழகத்தில் மேலும் ஓராண்டு தடை..!

Q

குட்கா, பான் மசாலாவை ஒழிக்க போலீசார், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடையை அடுத்தாண்டு மே 23ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குட்கா மீதான தடை 2013ல் கொண்டுவரப்பட்டு ஆண்டுதோறும் நீட்டிக்கப்படுகிறது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதால், விநியோகம், பதுக்கலுக்கான தடை அடுத்தாண்டு மே 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like