#BREAKING : முன்னாள் டிஎன்பிஎஸ்சி தலைவர் காலமானார்..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/4fface727023d171e478d9654f9ac660.jpg?width=836&height=470&resizemode=4)
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் தலைவராக கடந்த 1987 முதல் 1993 வரை பணியாற்றியவர் டி.லட்சுமிநாராயணன்.
டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த போது மிகுந்த நேர்மையுடன் பணியிடங்களை நிரப்பினார். அரசியல் அழுத்தங்கள் தரப்பட்ட போதும், அவர் பணியவில்லை.
முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இருவரிடமும், நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்ற பெயரைப் பெற்றவர்.இந்த நிலையில் அவர் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார். மூத்த ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி நாராயணன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் அஞ்சலி செலுத்தினார்.