1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : முன்னாள் சபாநாயகர் டி.பி.சந்திர கவுடா காலமானார்..!

1

கர்நாடகாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான டி.பி.சந்திர கவுடா சிக்மகளூர் மாவட்டத்தின் தரதஹள்ளியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார்.

மூன்று முறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒருமுறை சட்டமேலவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திர கவுடா, அவரது சிக்மகளூர் தொகுதியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி போட்டியிடுவதற்காக 1978-ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதையடுத்து காங்கிரஸ் சார்பில் சட்டமேலவை உறுப்பினராக 1978 முதல் 1983 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இந்நிலையில் திடீரென ஜனதா தளம் கட்சியில் இணைந்த சந்திர கவுடா 1983 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை கர்நாடக சட்டப்பேரவைத் தலைவராக பதவி வகித்தார்.

பின்பு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கர்நாடக மாநிலத்தின் சட்டத்துறை மந்திரியாக பொறுப்பு வகித்தார்.

Trending News

Latest News

You May Like