1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING:- முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு கடுங்காவல்..!

Q

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது நில மோசடி, தோக்ஷகானா எனும் கருவூல ஊழல், அரசு ரகசியங்களை கசியவிட்டது, அரசு சொத்துகளை தவறாக பயன்படுத்தியது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

பிரதமராக இருந்தபோது அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இம்ரான்கான் குற்றவாளி என நேற்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட நிலையில், இன்று இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.

பரிசுப் பொருள் வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல், அவரது 3ஆவது மனைவி புஷ்ரா பிபிக்கும் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான்கானுக்கு நேற்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட நிலையில், இன்று இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like