#BREAKING : அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் உட்பட 1000 அதிமுகவினர் கைது..!
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கான கட்டண விலக்கு நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகிறது.
உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மாதம் தோறும் 340 ரூபாய் கட்டணம் இன்று முதல் அமலாவதை எதிர்த்து இந்த போராட்டத்தை அதிமுக நடத்தி வருகிறது. அதிமுகவினர் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக சென்று வருகின்றன. கப்பலூர் பகுதியில் இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மதுரை திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் நிலையில், தற்போது உள்ளூர் மக்களுக்கும் ஜூலை 10ஆம் தேதி நள்ளிரவு முதல் 50 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது