#BREAKING : தமிழகத்தில் கோர விபத்து: கிணற்றில் பாய்ந்த வேன் - 5 பேர் பலி..!

தஞ்சாவூரைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குடும்பத்தினர், சாத்தான்குளம் அருகே உள்ள வெள்ளாளன்விளை பகுதியில் நாளை நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிக்காக சொந்த ஆம்னி காரில் வந்துள்ளனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக கார் விழுந்தது. இதில் காரில் இருந்த ஒரு குழந்தை உள்பட 7 பேரும் கிணற்றுக்குள் மூழ்கினர். இதற்கிடையில் காருக்குள் இருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மட்டும் காரை திறந்து கிணற்றில் இருந்து தப்பி வெளியே வந்துள்ளனர்.தொடர்ந்து அந்த வழியாகச் சென்றவர்களிடம் நடந்த விபரத்தை கூறி அழுதுள்ளனர்.
அவர்கள் அருகே உள்ள மீரான்குளம் கிராம மக்களிடம் கூறி கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். கிணறு சுமார் 50 அடி ஆழத்திற்கு இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் இறங்கி காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து கிராம மக்கள் அருகே உள்ள சாத்தான்குளம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றுக்குள் பொதுமக்கள் உதவியுடன் இறங்கி தேடி வருகின்றனர். கிணற்றுக்குள் குழந்தை உள்பட 5 பேர் சிக்கியுள்ள சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வேனில் இருந்த 8 பேரில் ஜெர்சோன், ஜெஸிட்டா, ஷைனி கிருபாகரன் ஆகியோர் பத்திரமாக வெளியேறிய நிலையில், 5 பேரின் உடல் 5 மணி நேர நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது. மீட்புக்குழுவினர் வேனில் இருந்து மோசஸ், வசந்தா, ரவி கோசல் பிச்சை, கெஞ்சி அல்கிருபா மற்றும் ஷாலினி ஆகியோரின் சடலங்களை மீட்டனர்.