#BREAKING: மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/765112c879ea7edb11897b23ef1f5779.jpg?width=836&height=470&resizemode=4)
தமிழக அரசு கொண்டுவந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதன்படி வரும் செப்டம்பர் 15 முதல் இந்த திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. தமிழகத்தின் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் இத்திட்டத்திற்காக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என தமிழ்நாடு அரசு அறிவிப்புவெளியாகியுள்ளது . நியாயவிலை கடைகளில் கைரேகை பதிவு கருவியை முறையாக சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது, மேலும் அனைத்து நியாயவிலை கடைகளிலும் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்காக விண்ணப்பிக்கலாம் என்றும் ஜூலை 17ம் தேதிக்குள் அனைத்து நியாய விலை கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்யத் துணை ஆணையர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.