1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றி! சவுமியா அன்புமணி தோல்வி

1

தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றி பெற்றுள்ளார்.தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போது 4:04 மணி நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் ஆ.மணி 3,61,082 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி 3,43,883 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் 2,40,914 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளனர். அதே போல், நாதக வேட்பாளர் அபிநயா பொன்னிவளவன் 50,201 வாக்குகள் பெற்றுள்ளார்.

தருமபுரி தொகுதியில் இன்று காலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியா அன்புமணி முன்னிலை வகித்தார். இதை தொடர்ந்து திமுக வேட்பாளர் மணிக்கும், சவுமியா அன்புமணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் பிற்பகல் முதல் திமுக வேட்பாளர் மணி முன்னிலை வகித்து வருகிறார். தற்போது தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் மணி பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணியை வீழ்த்தி வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் அன்புமணி தோல்வியுற்ற நிலையில் இந்த தேர்தலில் அவரது மனைவி சவுமியா தோல்வி அடைந்தார்.

Trending News

Latest News

You May Like