1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : நெல்லை திமுக மேயர் சரவணன் ராஜினாமா?

Q

நெல்லை மாநகராட்சியை பொறுத்தவரை திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் 51 பேர் அதிமுக கவுன்சிலர்கள் 4 பேர் என மொத்தம் 55 பேர் உள்ளனர்.  

மேயராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் திமுக கவுன்சிலர்களுக்கும் அவருக்கும் இடையே பல மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இது தொடர்பாக முதல்வர் உத்தரவின்பேரில் அமைச்சர் தங்கம் தென்னரசு பஞ்சாயத்து செய்தும் திமுக கவுன்சிலர்கள் பிடிவாதமாக இருந்தனா். 

போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்ட சரவணன், நெல்லையின் திமுக அடையாளமாக இருந்தார். ஆனால், அவர் மீது சொந்த கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து ராஜினாமா செய்ய வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் திமுக தலைமை நேரடியாக தலையிட்டதால், அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like