#BREAKING : நாட்டையே உலுக்கிய ஆணவப்படுகொலை வழக்கு :கொலையாளிக்கு மரண தண்டனை..!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார்.
பிரனய் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சூழலில் அம்ருதா கர்ப்பமடைய தம்பதிகள் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காகக் மருத்துவமனைக்கு வந்தபோது மருத்துவமனை வாசலிலேயே பிரனயை கூலிப்படையைச் சேர்ந்த ஒருவர் வெட்டிச் சாய்த்தார். இந்த ஆணவக் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக பெண்ணின் தந்தை உட்பட 8 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.இதில் பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், கூலிப்படை தலைவன் சுபாஷ் சர்மாவுக்கு மரண தண்டனையும், 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் இன்று (மார்ச் 10) தீர்ப்பு வழங்கியது.