1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING மீண்டும் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு! அச்சத்தில் மக்கள்!!

#BREAKING மீண்டும் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு! அச்சத்தில் மக்கள்!!


தமிழகத்தில் ஒரே நாளில் 80 பேர் கொரோனா தொற்றால் பலியானதை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,313 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு சமீப காலமாக குறைவாக பதிவாகி வந்த நிலையில், இன்று மீண்டும் 80ஆக பதிவாகியுள்ளது. இன்று ஒரே நாளில் உயிரிழந்த 80 பேரில் 3 பேர் இணை நோய் இல்லாதவர்கள்.

சென்னையில் மட்டும் இதுவரை 3166 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 542 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 541 பேரும், கோவை மாவட்டத்தில் 418 பேரும், மதுரை மாவட்டத்தில் 386 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 309 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

#BREAKING மீண்டும் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு! அச்சத்தில் மக்கள்!!

சென்னையில் தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்துக்கு மேல் பதிவாகி வருகிறது. இன்று ஒரே நாளில் 1280 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா உயிரிழப்பு மிக அதிகமாக இருந்தது.

ஆனால் கடந்த சில நாட்களாக பலி எண்ணிக்கை குறைந்த நிலையில், தற்போது மீண்டும் உயிரிழப்பு அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like