#BREAKING தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பும் குறைந்துள்ளது!

தமிழகத்தில் ஒரே நாளில் 49 பேர் கொரோனா தொற்றால் பலியானதை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,691ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இன்று 49 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்களின் ஒருவர் மட்டும் இணை நோய் இல்லாதவர். சென்னையில் மட்டும் இதுவரை 3536 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 634 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 603 பேரும், கோவை மாவட்டத்தில் 524 பேரும், மதுரை மாவட்டத்தில் 409 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 362 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா உயிரிழப்பு மிக அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பலி எண்ணிக்கை குறைவாக பதிவாகி வருகிறது.
newstm.in