1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: 'அறிவாலயம்' ஜெயக்குமார் மறைவு- முதல்வர் நேரில் அஞ்சலி!

Q

அண்ணா அறிவாலயத்தின் துணை மேலாளர் ஜெயக்குமார் உடல் நலக்குறைவால் காலமானார்.

சாதாரண தொண்டர்கள் முதல் முதல்வர் ஸ்டாலின் வரை, யாராக இருந்தாலும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை இவரிடம் தான் கொடுக்க முடியும். அந்த அளவுக்கு திமுகவில் செல்வாக்கு படைத்தவர். முதல்வர் ஸ்டாலினுக்கு நல்ல நண்பராக இருந்தவர். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவரது மறைவையொட்டி, சென்னையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், 'கழகத்தின் தூணாக விளங்கிய நம் அன்புக்குரிய ஜெயக்குமார் மறைந்த செய்தி என்னைச் சோகத்தில் ஆழ்த்தியது. தலைமைக் கழகத்தை நாடி வந்த ஒவ்வொரு உடன்பிறப்பும் அன்போடும் உரிமையோடும் உறவாடி 'அறிவாலயம்' ஜெயக்குமார் எனப் பெயரிட்டனர். அறிவாலயத்தின் மேலாளரான பத்மநாபனும் ஜெயக்குமாரும் இரட்டைத் தூண்களென கழகப் பணிகளைத் தாங்கி வந்தனர். ஜெயக்குமார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like