#BREAKING : மீண்டும் பீகாரில் பாலம் விபத்து : பீகார் சிவான் பகுதி பாலம் திடீரென இடிந்து விழுந்தது..!

கடந்த சில தினங்களுக்கு முன் பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்டிருந்த புதிய பாலம் திடீரென இடிந்து விழுந்தது. எனினும் இந்த விபத்தில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
இதனிடையே நொடிப்பொழுதில் பாலம் இடிந்து ஆற்றில் விழும் பதைபதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று பீகாரில் மற்றுமொரு பாலம் இடிந்து விழுந்தது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலம் சிவான் பகுதியில் பாலம் திடீரென இடிந்து விழுந்தது.
பீகாரில் பாலங்கள் விழுவதும், இடிந்து விழுவதும் நிற்கவில்லை. அராரியாவில் பக்ரா ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்த விவகாரம் ஓய்ந்திருந்த நிலையில், இன்று சிவான் பகுதி கந்தக் கால்வாயில் கட்டப்பட்ட பாலம் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. பாலம் இடிந்து விழுந்ததால், பல கிராமங்களுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பாலம் இடிந்து விழும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சிவான் மாவட்டத்தில் உள்ள தருண்டா தொகுதியின் ராம்கர்ஹா பஞ்சாயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தூண் மூழ்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
बिहार में पुलों के धँसने, गिरने और टूट कर बर्बाद होने का सिलसिला थम नहीं रहा है.....
— Nedrick News (@nedricknews) June 22, 2024
⚫शनिवार को सीवान में गंडक नहर पर बना पुल हुआ धवस्त..
⚫पुल गिरने के बाद लोगों में काफी गुस्सा है..#Bihar #Sivan #Bridge #GandakCanal #Nedricknews @NitishKumar @BiharGovt @bihargov… pic.twitter.com/2K7eugxk7B