#BREAKING : புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு புதுச்சேரி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவம் பார்க்க வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஜிப்மர் மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இதனையடுத்து ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஜிப்மர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
அவர்கள், அங்கிருந்த நோயாளிகளையும் உறவினர்களையும் உடனடியாக வெளியேற்றிவிட்டு அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதி
5 மாதங்களில் 2வது முறையாக ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்; தீவிர சோதனைக்கு பிறகு, வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தகவல்
ஜிப்மர் மருத்துவமனையில் போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் திடீரென்று முகாமிட்டு அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருவதால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் மத்தியிலும் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.