1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : சென்னையில் இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Q

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 நாட்களுக்கு முன்பு துப்பாக்கி சூடு நடத்தியதில் 26 இந்தியர்கள் கொல்லப்பட்டனா். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மின்னஞ்சல் ஒன்று வந்தது. இதனை தொடர்ந்து உடனடியாக போலீசாருக்கும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது .இதனை தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் எடப்பாடி பழனிசாமி வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த சோதனையின்போது, அவரது வீட்டின் அனைத்து பகுதிகளுக்கு ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும், அவரது வீட்டில் சோதனை நடத்தினா். இதனால் எடப்பாடி பழனிசாமி வீட்டின் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like