1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : மேலும் ஒரு வேங்கைவயல் சம்பவம் - விழுப்புரத்தில் பரபரப்பு..!

Q

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்காவில் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர்.பாளையம் கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் குடிநீராக பயன்படுத்தும் திறந்தவெளி கிணற்றில் மனித மலம் கழிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திறந்தவெளி கிணற்றிலிருந்து மோட்டார் மூலம் 100 வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், தடுப்பு சுவரில் அமர்ந்து கிணற்றில் மலம் கழித்ததாக அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர். வேங்கைவயல் விவகாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், மற்றொரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like