#BREAKING : அண்ணாமலை இல்லை...பாஜக அறிவித்தது..!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை. 3 ஆண்டுகளாக தமிழக பாஜகவின் தலைவராக செயலாற்றி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவரின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட்டது. அதில் நயினார் நாகேந்திரன் புதிய மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அண்ணாமலையின் பங்களிப்பு முக்கியமானது, கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்களை பாஜக பயன்படுத்தும் என்று அமித் ஷா அறிவித்திருந்த நிலையில் ஆந்திராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கு தேர்வாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் விஜய்சாய் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேல் பதவிகாலம் இருக்கும் நிலையில், சொந்த காரணங்களுக்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவி பாஜகவிற்கு ஒதுக்க தெலுங்கு தேசம் கட்சி ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்த பதவி அண்ணாமலைக்கு வழங்கப்படும் என ஆந்திரா அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஆந்திராவில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை எம்பி. இடத்திற்கான இடைத்தேர்தலில் NDA கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக வெங்கட சத்யநாராயணா இன்று(ஏப்.24) அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஆந்திராவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில், பாஜக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.