#BREAKING : அதிமுக வெளிநடப்பு..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/9ab7e780424b503c7c2257feddf243a3.jpg?width=836&height=470&resizemode=4)
காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மட்டுமே ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் கடந்த ஆட்சியில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்து பேசினார். தமிழ்நாட்டில் பிறந்த யாரும் மேகதாதுவில் அணை கட்ட ஆதரவு தரமாட்டார்கள் என்று ஆவேசமாக பேசினார்.
மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறியும், கர்நாடக அரசுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் இருந்து இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். இதன்பின், திமுக அரசே தூங்காதே, மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்காதே, மத்திய, மாநில அரசை கண்டிக்கிறோம் என்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோஷம் எழுப்பினர்.