1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : அதிமுக கூட்டணியிலிருந்து விலகல் - SDPI..!

Q

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் அதிமுக - பாஜக கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த 2 கட்சிகளும் வரும் தேர்தலை ஒன்றாக எதிர்கொள்ள உள்ளன.

 

இதன்மூலம் தமிழகத்தில் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி என்பது மலர்ந்துள்ளது. இதற்கிடையே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது. அந்த கட்சிக்கு திண்டுக்கல் லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில் கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லை முபாரக் திடீரென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

இந்நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் அறிவித்துள்ளார்.

தேவை என்றால் யார் காலிலும் விழுவார்கள். தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள். அதுதான் பாஜகவின் நிலைப்பாடு. அவர்களோடு கூட்டணி வைத்த கட்சிகள் எல்லாம் அழிந்துவிட்டன. இப்போது தமிழ்நாட்டில் ஒரு கட்சி அழியப்போவது உறுதி" என்றார்.

மேலும், பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் எல்லாம் அழிந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எந்த அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தற்போது SDPI எந்த அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி வைக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Trending News

Latest News

You May Like