#BREAKING : அ.தி.மு.க., அமைப்புச் செயலாளர் தளவாய் சுந்தரம் பதவி பறிப்பு..!

கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம், இவர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தவர். இரு நாட்களுக்கு முன் கன்னியாகுமரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., பேரணியை தொடங்கி வைத்தார். அவர், பா.ஜ.,வினருடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, அவரது கட்சிப் பதவிகளை பறித்து இ.பி.எஸ்., நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது குறித்து, அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கட்சி விதிகளுக்கு மாறுபட்டு நடந்து கொண்டுள்ளார். இது பற்றி விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவர் அ.தி.மு.க., அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுக்கப்படுகிறார்' என்று தெரிவித்துள்ளார்.