#BREAKING : நடிகை குஷ்பூவிற்கு உடல் நலம் பாதிப்பு..! இனி பிரச்சாரங்களில் பங்கேற்க மாட்டார்..!
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், நகை மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையில் தலா ஒரு அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 4 முனைப்போட்டி நிலவுகிறது. கோடை வெயிலுக்கு மத்தியில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் பயணத் திட்டத்தை வகுத்துக்கொண்டு, தொகுதி வாரியாக சென்று தேர்தல் பிரசாரங்களில், பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்கள்
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக பிரமுகரும் பிரபல நடிகையுமான குஷ்பூ சில நாட்களாக பிரச்சாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவிய நடிகை குஷ்பு அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக பிரச்சாரங்களில் பங்கேற்க முடியாது என்று பாஜக தேசிய தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாஜக தலைவர் ஜே பி நட்டா அவர்களுக்கு எழுதிய கடிதத்தை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதில் " ஏற்பட்ட காயத்தால் தான் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாலும் தன்னால் பிரச்சாரத்தில் இனிமேல் கலந்து கொள்ள முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.
At times, hard decisions have to be taken and focus needs to be on one's health. I am at such a juncture today. I have dedicated myself to @BJP4India and have been following the path of our beloved PM @narendramodi ji, immersing myself in the election campaign activities. But… pic.twitter.com/tuevsqczok
— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) April 7, 2024