#BREAKING: நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்..!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்த கவுண்டமணிக்கு, தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் கதாநாயன்களுக்கு இணையான சம்பளத்தை பெற்று வந்தவர். கவுண்டமணி பேரும் புகழோடு வாழ்ந்து வந்துள்ளார். குறிப்பாக செந்தில் உடன் சேர்ந்து இவர் நடித்த காமெடி படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட எல்லா படங்களிலும் இவர்கள் சேர்ந்து நடித்து விடுவார்கள். தற்போது, எத்தனையோ காமெடி நடிகர்கள் பல காமெடிகளை செய்கிறார்கள். ஆனால், இவர்களின் காட்சியில் வரும் காமெடிகள் எப்போதும் மன மக்கள் மனதில் நிற்கும்.
கடந்த 1963 ஆம் ஆண்டு சாந்தி என்பவரை கவுண்டமணி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் சற்றுமுன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் காலமானார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில், இறுதிச் சடங்குகளுக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.