1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : புதிய போப் ஆண்டவர் தேர்வானார்!

1

உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் காலமானார். ஈஸ்டர் திருநாளை தொடர்ந்து அவரது உயிர் பிரிந்தது. இந்த நிலையில் புதிய போப் யார் என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பான ரகசிய தேர்தல் கடந்த 7ந் தேதி தொடங்கியது. வாடிகன் நகரில் உள்ள தேவாலயத்தில் இந்த தேர்தல் தொடங்கியது. மிகவும் பாதுகாப்பாக மற்றும் ரகசியமாக நடக்கும் தேர்தல் புகை மூலம் தான் முடிவுகளை அறிவிக்கும்.

அதாவது வெள்ளைநிற புகை வந்தால் போப் தேர்வு செய்யப்பட்டுவிட்டார் என்று அர்த்தம் ஆகும். அதே சமயம் கருப்பு நிற புகை வந்தால் புதிய போப் தேர்வு செய்யப்பட்டுவிட்டார் என குறிப்பிடும். கடந்த 2 நாட்களாக போப்பை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்றது. 2 நாள் முடிவிலும் புதிய போர் யார் என்பது தேர்வாகாமல் இருந்தது.

 

இதனால் தேர்தல் நடக்கும் கட்டிடத்தில் இருந்து கருப்புநிற புகை மட்டும் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் புதிய போர் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ஆதாரமாக கட்டிடத்தில் இருந்து வெள்ளை நிற புகை வெளியேற்றப்பட்டது.

புதிய போப் ஆண்டவராக ராபர்ட் ப்ரி வோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் போப் 14-ம் லியோ என அறியப்படுவார். அமெரிக்காவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப் இவர் என்பது குறிபிடத்தக்கது.

 


 

Trending News

Latest News

You May Like