#BREAKING :;தென்காசி, துாத்துக்குடிக்கு ரெட் அலெர்ட்..!
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று (டிச.,12) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் 200 மி,மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.இதனால், 115.6 மி.மீட்டர் முதல் 201.4 மி.மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மிக கன மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இதனால், 64.5 மி.மீட்டர் முதல் 115.5 மி.மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.