#BREAKING ஒரே நாளில் 71 பேர் பலி! கோரத் தாண்டவமாடும் கொரோனா!
#BREAKING ஒரே நாளில் 71 பேர் பலி! கோரத் தாண்டவமாடும் கொரோனா!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 71 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,917 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 71 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் வேறு எந்தவிதமான இணை நோய் இல்லாதவர்கள்.
சென்னையில் மட்டும் இதுவரை 3318 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 576 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 567 பேரும், கோவை மாவட்டத்தில் 470 பேரும், மதுரை மாவட்டத்தில் 394 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 336 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்துக்கு மேல் பதிவாகி வருகிறது. இன்று ஒரே நாளில் 1306 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா உயிரிழப்பு மிக அதிகமாக இருந்தது.