#BREAKING : வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள் - மு.க. ஸ்டாலின்..!

வணிகர் சங்கங்களின் பேரவை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து நிரந்தர உறுப்பினர்களாக இருப்போருக்கான உதவித்தொகை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும், கட்டணமில்லா உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசம் மேலும் 6 மாதங்கள் நீடிக்கப்படும்.
உணவுப் பொருட்கள் விற்பனை தவிர்த்து 500 சதுர அடிக்கு கீழ் உள்ள நிறுவனங்களுக்கு சுய சான்றிதழ் அடிப்படையில் தொழில் உரிமம் வழங்கப்படும். சென்னை மாநகராட்சி, பேரூராட்சி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடைகள், வணிக வளாக பிரச்னைகளை தீர்க்க வழிகாட்டுக் குழுக்கள் அமைக்கப்படும்.
சென்னை மாநகராட்சி நீங்கலாக பிற மாநகராட்சிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் உள்ள பிரச்னைகளை தீர்க்க அமைக்கப்பட்ட வழிகாட்டுக்குழுவைப் போல, சென்னையிலும் பிற நகராட்சிகளிலும் அமைக்கப்படும்.
9 சதுர மீட்டருக்கு மிகாமல் வைக்கப்படும் பெயர் பலகைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. வர்த்தகர்கள், சிறு வியாபாரிகளுக்கான புதிய இணையதளம் உருவாக்கப்படும். 22 சேவைகளை இதன் மூலம் வணிகர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் வணிக நிறுவனங்களை திறக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். வணிகர்கள் தங்களது கடைகளுக்குத் தமிழில் பெயரைச் சூட்ட வேண்டும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதற்கு வணிகர்கள் துணை நிற்க வேண்டும். மே 5ஆம் தேதி வணிகர் நாளாக விரைவில் அறிவிக்கப்படும்” என பேசினார்.
#JUSTIN வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 5, 2025
வணகர் சங்க மாநாட்டில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்#MKStalin #Vanigarsangam #News18Tamilnadu https://t.co/3v5L32pe7b pic.twitter.com/LYtyPnxsYf