1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுரங்கத்தொழிலாளர்கள் 20 பேர் பலி..!

Q

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில், நிலக்கரி சுரங்கம் ஒன்று இயங்கி வருகிறது. இங்குத் தொழிலாளர்கள் வழக்கம்போல், பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவர்கள்மீது ஆயுதம் ஏந்திய நபர்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர்.
இதில், சுரங்கத்தொழிலாளர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 7 பேர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஹுமாயுன் கான் கூறியதாவது: ஆயுதமேந்திய குழுவினர் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள்மீது ராக்கெட்டுகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசினர். துப்பாக்கி சூடும் நடத்தினர். இதில் உயிரிழந்த 20 பேரின் உடல்களை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் வைத்துள்ளோம் என்றார்.

Trending News

Latest News

You May Like