ஆவடி OCF தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

மத்திய அரசின் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான படைத்துறை சீருடை தொழிற்சாலை (OCF) நிறுவனம் ஆவடியில் அமைந்துள்ளது. இங்கு ராணுவத்திற்கு படை உடைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அலறி அடித்து வெளியேறி உள்ளனர். இதையடுத்து, ஆவடி,ஆவடி டேங்க் ஃபேக்டரி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வளாகம் முழுவதும் சோதனை நடத்தினர். இதனால் பதற்றமான சூழல் நிலவியது.எனினும், வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.