துபாய் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!
சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த விமானத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதை தொடர்ந்து துபாய் செல்ல இருந்த எமிரேட்ஸ் விமானத்தில் பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி விட்டு விமானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும் விமானத்தில் இருந்து பயணிகளின் உடைமைகளை ஓடுதளத்தில் இறக்கிவைத்து சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 3 மணி நேர தீவிர சோதனைக்கு பிறகு விமானத்தில் வெடிகுண்டு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் வந்த இ-மெயில் முகவரியை ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வில் இஸ்தான்புல் நகரில் இருந்து இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.