சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தது.
சம்பவ இடத்துக்கு மோப்பநாய்களை அழைத்துக் கொண்டு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். போலீசாரும் சோதனையில் இறங்கினர். பலமணி நேர சோதனையில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படாத நிலையில் இது வெறும் மிரட்டல் என்பது தெரிய வந்தது.