1. Home
  2. தமிழ்நாடு

முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் - மும்பையில் ஒருவர் கைது!

முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் - மும்பையில் ஒருவர் கைது!


உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மும்பை காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநில காவல்துறை தலைமையகத்தின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் யோகி ஆதித்யநாத் மீது வெடிகுண்டு வீசி கொல்லப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணையை தொடங்கினர். அதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக கம்ரன் கான் என்பவரை மும்பையில் மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like