1. Home
  2. தமிழ்நாடு

பாலிவுட் போதைப் பொருள் விவகாரம்...  சிக்கும் தீபிகா படுகோனே !



பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மரணம் மற்றும் போதை பொருள் தொடர்பான விவகாரம்.

நடிகர் சுஷாந்துக்கு போதைப் பொருள் வாங்கி கொடுத்ததாகவும், போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும் அவரது காதலி ரியா கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், சரா அலி கான், ஷ்ரதா கபூர் ஆகியோர் போதைப் பொருள் பயன்படுத்துவதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் அவர்களுககு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

பாலிவுட் போதைப் பொருள் விவகாரம்...  சிக்கும் தீபிகா படுகோனே !இதனிடையே ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரியாவின் டேலன்ட் மேனேஜரான ஜெயா சாஹா என்பவர் தான் நடிகைகளுக்கு போதைப் பொருள் சப்ளை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்க அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இப்போது பிரபல நடிகை தீபிகா படுகோனேவும் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்குகிறார். அவரது மேலாளராக பணியாற்றி வரும் கரிஷ்மாவுடன் வாட்ஸ்ஆப்பில் நடத்திய உரையாடல் பதிவை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அந்த உரையாடலில் கரிஷ்மாவிடம் தீபிகா போதைப் பொருள் கேட்பதும், அதற்கு தனது வீட்டில் அவை இருப்பதாகவும் கரிஷ்மா பதிலளிக்கும் விவரங்கள் உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அந்த ஆடியோவில், நான் இப்போது வீட்டில் இல்லையென கூறும் கரிஷ்மா, உடனடியாக வேண்டுமெனில் அமித் என்பவரிடம் கேட்பதாக பதிலளிக்கிறார். அதற்கு தயவு செய்து அவரிடம் கேட்டுசொல் என தீபிகா பதில் கூறும் விவரங்களும் இருக்கின்றன என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த வாட்ஸ்ஆப் உரையாடலின் அடிப்படையில் முதற்கட்டமாக நடிகை தீபிகாவின் மேலாளர் கரிஷ்வை விசாரணைக்கு வருமாறு அதிகாரிகள் அழைத்துள்ளனர்.

அவரிடம் விசாரணை முடிந்த பிறகு தீபிகா படுகோனுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


newstm.in


Trending News

Latest News

You May Like