1. Home
  2. தமிழ்நாடு

பாஜகவினர் மக்களை தேர்தலுக்கான ஒரு வாக்காக தான் பார்க்கிறார்கள் : சீமான்

1

மணிப்பூர் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சீமான், “பாஜக மனித குலத்தின் எதிரி என்பதை சும்மா சொல்லவில்லை அதன் வரலாறு அதை நிரூபிக்கும். தம்பி அண்ணாமலை நடைபயணம் செல்கிறார். நேர எடப்பாடி வீட்டுல்தான் போய் நிற்பார். பாஜகவினர் பொதுமக்களை தேர்தலுக்கான ஒரு வாக்காக தான் பார்க்கிறார்களே தவிர, ஒரு உயிராக மதிக்கவில்லை. 

தேச ஒற்றுமையைப் பற்றி பேச தகுதியற்றவர்கள், நேர்மையற்றவர்கள் தான் மீண்டும் மீண்டும் தேச ஒற்றுமையைப் பற்றி பேசுகிறார்கள். குஜராத் மாடல் போல், திராவிட மாடல் போல், நடைபயணம் என்பதும் ஒரு பழையான மாடல். ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார், அவருக்கு எதுவும் நடக்கவில்லை.  நிலக்கரி சுரங்கத்தை மறுபடியும் இடிச்சுட்டு விளைநிலமாக மாற்ற முடியுமா? பாசக, காங்கிரசை மட்டுமே ஒழிப்பது மட்டுமே நம் வேலையல்ல அதை தூக்கிச் சுமந்து வரும் திமுக, அதிமுகவையும் ஒழிக்க வேண்டும்” என்றார்.
 

Trending News

Latest News

You May Like