1. Home
  2. தமிழ்நாடு

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திருப்பதியில் சுவாமி தரிசனம்..!

1

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று திருமலையில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

தரிசனத்திற்கு பின் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, 

திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பிரார்த்தனையுடன் எனது நாள் தொடங்கியது, வெங்கடேஸ்வர சுவாமியின் ஆசீர்வாதம், இந்த புனித ஸ்தலத்தின் அமைதியும், வெங்கடேஸ்வரரின் தெய்வீக சக்தியும் நம் இதயங்களை அமைதியால் நிரப்புகின்றன.

நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்தனை செய்தேன். வெங்கடேசப் பெருமான் நம் மீது அருள் பொழிந்து செழிப்பு, ஒற்றுமை மற்றும் அமைதியை நோக்கி நம்மை வழிநடத்தட்டும். இவ்வாறு அந்த பதிவில் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். 

Trending News

Latest News

You May Like