பாஜக எம்எல்ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை..!

கர்நாடக முன்னாள் அமைச்சரும் சுரங்க தொழிலதிபருமான ஜனார்த்தன ரெட்டி மீதான சட்ட விரோத சுரங்க வழக்கை சிபிஐ கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரித்து வருகிறது.
ஜனார்த்தன ரெட்டி, அவரது மனைவி மற்றும்நிறுவனங்கள் வருமானத்துக்கு அதிகமாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சொத்துகளை குவித்திருப்பது தெரியவந்தது.
தெலுங்கானாவின் அனந்தபூர் மாவட்டத்தில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு, 13 ஆண்டுகளாக விசாரணையில் உள்ளது, 3,400 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு 219 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் சுரங்க அதிபர் ஜனார்தன் ரெட்டி, ஓஎம்சி நிர்வாக இயக்குநர் பி.வி. ஸ்ரீனிவாச ரெட்டி, காலியின் தனி உதவியாளர் மெஃபாஸ் அலி கான், சுரங்கத் துறையின் முன்னாள் இயக்குநர் வி.டி. ராஜகோபால், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கிருபானந்தம், தெலுங்கானா அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி, 2022-ல் பணிநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி ஒய். ஸ்ரீலட்சுமி, சுரங்கத் துறையின் உதவி இயக்குநர் ஆர். லிங்க ரெட்டி ஆகியோர் அடங்குவர்.
அவர்கள் மீது ஐபிசி பிரிவுகள் 120பி (குற்றச் சதி), 420 (மோசடி), 409 (குற்ற நம்பிக்கை மீறல்), 468 & 471 (மோசடி) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவுகள் 13(2) & 13(1)(d) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆந்திராவின் ஓபுலாபுரம் சுரங்க முறைகேடு வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சரும் பாஜக எம்எல்ஏவுமான ஜனார்த்தன ரெட்டி உள்ளிட்டோர் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் இன்று (மே 6) தீர்ப்பளித்தது. இதனால் அவரது எம்எல்ஏ பதவி பறிபோனது. 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஜனார்த்தன ரெட்டி உட்பட 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.