1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் - தமிழிசை சவுந்தரராஜன்..!

1

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் தெலுங்கானாவின் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி, வாக்கு சதவிகிதமும் அதிகரிக்கும். பாரத தேச மக்கள் நாட்டின் வளர்ச்சிக்காகவும், ஊழலுக்கும் எதிராக வாக்களித்துள்ளனர். 

நாங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக வாக்களிக்கிறோம் என மக்கள் மகிழ்ச்சியாக சொல்கின்றனர். மக்கள் நாட்டின் பாதுகாப்பை உணர்ந்தே பா.ஜ.க.வுக்கு வாக்களித்துள்ளனர். பிரதமர் மீது, மக்கள் அபரிவிதமான அன்பை வைத்திருகின்றனர்.

கன்னியாகுமரிக்கு மோடி தியானம் செய்ய வந்தார்.  பிரதமர் செல்லும் போது தியானம் செய்த இடம் குறித்து மக்களுக்கு அதற்கான முக்கியத்துவம் தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார்.  

Trending News

Latest News

You May Like