1. Home
  2. தமிழ்நாடு

பில்லி, சூனியம் வைத்ததாக சந்தேகம்… 2 பேரை தீ வைத்து எரித்த கொடூரம்!



பில்லி, சூனியம் வைத்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் பெண் உள்பட இரண்டு பேரை அடித்துக் கொன்று தீ வைத்து எரித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டம் ரஹிமாபூர் என்ற மலைகிராமத்தை சேர்ந்த ரோஷ்மி ஹவர் என்ற இளம்பெண் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன் தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட அதே பகுதியை சேர்ந்த ராமாவதி மற்றும் பிஜாய் ஹவர் தான் காரணம் என்றும், அவர்கள் தனக்கு பில்லி சூனியம் வைத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

அதனால் அந்த இரண்டு பெண்கள் மீது கிராம மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். இதனிடையே ரோஷ்மி உயிரிழந்த 3ஆவது நாளில் மலைகிராம தலைவரின் மகளுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அந்த இளம்பெண்ணும் உடல்நலக்குறைவுக்கு பில்லி சூனியம் தான் காரணம் என குற்றம் சாட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ராமாவதி, பிஜாய் ஆகியோரின் வீட்டிற்கு சென்று அவர்களை கடுமையாக தாக்கினர். பின்னர் இருவரையும் கிராமத்திற்கு வெளியே இழுத்து சென்ற அந்த கும்பல் மலைப்பகுதியில் அவர்களை அடித்துக்கொன்றனர்.

அதனைத் தொடர்ந்து இருவரின் தலைகளை துண்டித்து உடலை தீவைத்து எரித்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொடூரத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 9 பேரை கைது செய்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like