1. Home
  2. தமிழ்நாடு

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்..!

1

பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தார். லல்லு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருந்தார். திடீரென கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், பா.ஜனதாவுடன் இணைந்தார். இதனால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் பா.ஜனதா ஆதரவுடன் முதல்வராக நிதிஷ்குமார் பதவி ஏற்றுக் கொண்டார்.

மீண்டும் முதல்வராக பதவி ஏற்ற நிதிஷ்குமார் சட்டசபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டிருந்தார். பீகார் சட்டசபையில் மொத்தம் 243 எம்.எல். ஏ.க்கள் உள்ளனர். தனித்து ஆட்சி அமைக்க 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் நேற்று பீகார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நிதிஷ் குமார் 129 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபித்து முதல்வர் பதவியை தக்க வைத்து கொண்டார். 

Trending News

Latest News

You May Like