#BIG NEWS : இனி 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/a0e290ca5c16288b4e52204a6427406c.webp?width=836&height=470&resizemode=4)
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு தமிழகத்தில் அறிமுகப்படுத்திய மகளிர் உரிமை தொகை திட்டம் போல் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.
டெல்லி சட்டசபையில் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில நிதியமைச்சர் அதிஷி தாக்கல் செய்தார். அப்போது அவர் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் என அறிவித்தார். இந்த திட்டத்தின் பெயர் 'முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா'. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைப் போலவே டில்லியிலும் இந்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டில்லி சட்டப்பேரவையில் இன்று 2024- 2025ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.